டெல்லியில் இன்று முதல் T20 போட்டி நடைபெறுவதில் திடீர் ட்விஸ்ட்! பிசிசிஐயின் புதிய அறிவிப்பு!
India vs Bangladesh 1st T20 Match
இந்தியா பங்களாதேஷ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி ஆனது, இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 7 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியானது தற்போது வரை நடைபெறுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டி சென்றுள்ளதால், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியானது நடைபெறுமா நடைபெறாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மாலை 7 மணிக்கு முன்னதாக போட்டி நடைபெறுமா? நடைபெறாதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐந்தாம் தேதி வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
India vs Bangladesh 1st T20 Match