4 பந்துகளில் 4 விக்கெட்! 23 ரன்களுக்கு 7 விக்கெட்! இந்திய அணி அபார ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 

தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியும், நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி பெற்ற ஜப்பான் அணியும் இன்று மோதுகிறது. இந்திய அணியின் கேப்டன் பராக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய ஜப்பான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஜப்பான் அணி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 23 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஜப்பான் அணி தடுமாறி வருகிறது. 

இந்திய அணியின் வீரர் ரவி பிஷ்நோய் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் ரவி பிஷ்நோய் இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட் எடுத்திருந்த நிலையில் இன்று ஜப்பான் அணிக்கு எதிராக முதல் இரண்டு  பந்துகளில் 2 விக்கெட் எடுத்து தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டும் வேறுவேறு போட்டிகள் என்பதால் இது ஹாட்ரிக் பட்டியலில் இணையாது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india U19 top level performance against Japan U19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->