இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இதற்கு பின் ஜிம்பாப்வே அணியின் சர்வதேச அங்கீகாரத்தை ஐசிசி தற்காலிகமாக ரத்து செய்தது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை பிசிசிஐ நிராகரித்தது.

ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக இலங்கை அணியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடும்படி பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இது குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடருக்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தவகையில்   முதல் போட்டியானது வரும் ஜனவரி 5 ஆம் தேதி கவுகாத்தியிலும், இரண்டாவது போட்டி ஜனவரி ௭ ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 10 ஆம் தேதி புனேவிலும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india srilanka t20 schedule announced by bcci


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->