இறுதி போட்டியில் ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! ஆஸ்திரேலியாவை தவிடு பொடியாக்கி வரலாறு படைக்குமா..? - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திது.

அடிலெய்ட் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவாப் போட்டியாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில் இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று  ஆஸ்திரேலிய அணி முனைப்புடன் களமிறங்குகிறது.

 டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவெடுத்தார்.இந்திய அணியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

அம்பாத்தி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கேதார் ஜாதவ் மற்றும் சஹால் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியிலும் சிறு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தொடங்கி இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் தடைபட்டது.

தற்போது மழை ஓய்ந்துவிட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india-in-australia/india-vs-australia-live-score-3rd-odi-virat-kohli-asks-australia-to-bat-first


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->