இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை! இறுதிப்போட்டிக்கான தேதி ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கொரோனா  அச்சுறுத்தல்  காரணமாக இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஒத்தி  வைக்கப்பட்டுள்ளதாக இன்று ஐசிசி அறிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இந்த வருடம் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 20 உலகக் கோப்பை போட்டி ஆனது கொரோனா  அச்சுறுத்தல்  காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் அடுத்த வருடம் அதே  ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறும் எனவும் நவம்பர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் அதற்கு அடுத்த வருடமே அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் எனவும், அதுவும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறும் எனவும், இறுதி  போட்டி நவம்பர் 13ம் தேதி  நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை இந்தியா நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதற்கடுத்தபடியாக 2023ம் வருடம் நடக்க வேண்டி 50 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியானது அக்டோபர் நவம்பர் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி இறுதி  போட்டி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அடுத்தடுத்து பெரிய தொடர்கள் நடக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Host two word cup Tournament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->