இன்றைய போட்டியில் அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ள விராட் கோலி! சாதிக்குமா இந்தியா?!
India doesn't have sixth bowling option in semi final
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12 ஆவது உலகக் கோப்பை போட்டியில் இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் நீக்கப்பட்டு சாஹல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சவுத்தி நீக்கப்பட்டு பெர்குசன் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இன்று விளையாடும் 5 பந்துவீச்சாளர்களில் புவனேஸ்வர், பும்ரா, சாஹல் என 3 பேர் மட்டுமே பிரதான பந்துவீச்சாளர்கள். பாண்டியா, ஜடேஜா ஆல்ரவுண்டர் இடம் பெற்றுள்ளார்கள். இந்தியாவிற்கு இவர்களை தவிர வேறு யாருமே பந்துவீச வாய்ப்பில்லை என்பது தான் துரதிஷ்டம். ஏனெனில் டோனி, கார்த்திக், ராகுல், பாண்ட் என நான்கு விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி களமிறங்குவதால் பவுலிங் ஆப்ஷன் இல்லை.
ஒருவேளை தேவைப்பட்டால் கோலி, ரோஹித் தான் பந்துவீச வேண்டிய நெருக்கடி உள்ளது. அவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் கூட பந்துவீசுவதில்லை என்பதனை நினைத்தால் தான் சற்று தலை சுற்றுகிறது. தேவைப்பட்டால் தோனியும் பந்துவீச வாய்ப்பு உள்ளது. ஐந்து பந்து வீச்சாளர்களுடன் கோலி செல்வது தைரியமான முடிவாகவே தெரிகிறது. இது இந்தியாவிற்கு கைகொடுக்குமா என்பது அடுத்த 3 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
இதற்கு முன்பு இப்படி ஆடினார்கள் என்றாலும், அது லீக் போட்டி, இது நாக் அவுட் போட்டி என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
India doesn't have sixth bowling option in semi final