இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். முன்னால் பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகளுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

உலகக்கோப்பை போட்டி வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளது. இதில் வெற்றி பெரும் கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.  இந்த நிலையில் இந்தியாவுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. 

இது குறித்து இன்சமாம்-உல்-ஹக்  இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் மிகவும் நெருக்கடிக்குள்ளானதாகவும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல சற்று சுலபமாக இருக்கும் என கூறியுள்ளார். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மிகவும் நெருக்கடிக்குள்ளான ஆட்டம் இந்த போட்டிக்கு பின்னால் ஏராளமான சர்ச்சைகள் நிறைந்து உள்ளன ஆனால் நாங்கள் எங்களுடைய கிரிக்கெட் பலத்துடன் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india against pakistan match must need win pak. former pakistani player has said.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->