அடிதூள்: சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 5 புதிய வீரர்கள் இன்றைய போட்டியில் அறிமுகம்.!  - Seithipunal
Seithipunal


இன்றைய முன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து புதிய வீரர்களை இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளது.

இந்திய அணி தொடரை வென்று விட்டதால், அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி போட்டியில் ஒருசில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அனைவரும் எதிர்பார்த்தபடியே, ஒன்று இரண்டு அல்ல, ஐந்து புதிய வீரர்களை இந்திய அணி களமிறங்கியுள்ளது.

சஞ்சு சாம்சன், 
நிதிஷ் ராணா, 
ராகுல் சஹர், 
சேத்தன் சக்கரியா,
கே கெளதம் ஆகியோர் இன்றைய போட்டியில் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். 

 

சர்வேதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகும் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 
P ஷாவ், S தவான், S சாம்சன், M பாண்டே, S யாதவ், N ராணா, H பாண்டிய, K கெளதம், R சஹர், N சைனி, C சக்கரியா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sl 5 ODI debut


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->