நாளைய சம்பவம் வரலாறு ஆகுமா? வெற்றியை பறிக்க நடக்கும் தொடர் சதி.! அலாரம் செட் செய்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு டெஸ்ட் தொடரில் 4-வது ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.  ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 369 ரன்கள் சேர்த்து.

இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் அறிமுகம் ஆன தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்களை எடுத்து அசத்தினர். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


 
இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்து அசத்தினர். 

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 294 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முதல் ஓவரில் 4 ரன்கள் அடித்தார். ஆஸ்., அணி 1.5 ஓவர்கள் வீசிய நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய 4வது நாள் ஆட்டம் இதுக்கு மேல் நடப்பது சந்தேகம் தான். 

நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ளது. இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதே சமயத்தில் ஆஸ்., அணி அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இந்த 4 வது டெஸ்ட் ஆட்டம் ஆரம்பித்த நாள் முதலே மழை குறுக்கிட்டு சுமார் ஆட்ட நேரம் 5 மணி நேரத்தை வீணாக்கி உள்ளது. நாளை ஒரு நாளில் வெற்றி இலக்கை எடுக்க இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய அணி ஆட்டத்தை சமனில் கொண்டு வந்தால் கூட இந்த தொடருக்கான கோப்பை இந்திய அணியிடம் தான் இருக்கும் என்பதால், ஆஸ்., அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

 

அதே சமயத்தில் இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடி தோல்வியை தழுவினால், அதற்கு மழை ஒன்று தான் காரணம் என்பதால், இயற்கை செய்யும் இந்த சதியை எண்ணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

நாளை மட்டும் மழை குறுக்கிடாமல் ஆட்டம் நடைபெற்றால். நாளைய ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் மாற்றம் இல்லை. அந்த அனலை யார் ஏற்படுத்த போகிறார்கள் ஆஸ்திரிரேலியா அணி பந்து வீச்சாளர்களா? இல்லை இந்திய அணி பேட்ஸ் மேன்களா? என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு தொற்றியுள்ளது.

எது நடக்குமோ., நடக்குதோ., ஆனால், நம் இந்திய ரசிகர்கள் நாளை காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து மேட்ச் பார்க்கப்போவது மட்டும் உறுதி.
 

(குறிப்பு: இன்று காலை முதல் இந்திய-ஆஸ்., ரசிகர்கள் #RAIN (மழை) என்ற ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட்(புலம்பி) செய்து வருவது குறிப்பிடத்தக்கது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS test winner who


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->