அடித்து நொறுக்கிய தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல்...! எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்திய ஆஸ்திரேலிய போட்டி.. களமிறங்கும் ஆஸி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விலடவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது.. இந்திய அணி விராட்கோலியன் தலைமையில் இம்மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. 

இந்த நம்பிக்கையுடன் இந்திய அணி போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், இறுதியில் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. கடந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சாமி, பும்ரா ஆகியோரும் விளையாடினர்..

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவன் ஸ்மித், அஷ்டின் டர்னர், அலெக்ஸ் காரே, அஸ்டோன் அகர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா  ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுகளை கூட இழக்காமல், 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இன்று ராஜ்கோட் நகரில் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் வைத்து ஆட்டம் துவங்கியுள்ள நிலையில், வழக்கம்போல டாஸை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பேட்டிங் செய்ய தயாரான இந்திய அணியின் சார்பாக துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் நின்று ஆடி வந்த நிலையில், ரோஹித் சர்மா 44 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய விராட் கோலி - ஷிகர் தவான் கூட்டணி நல்லபடியாக விளையாடி வந்த நேரத்தில், ஷிகர் தவான் 90 பந்துகளில் 96 ரன்கள் 
அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் - விராட் கோலி ஜோடி ஆட்டமாடி வந்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் 17 பந்துகளில் வெறும் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் லோகேஷ் ராகுல் களமிறங்க, லோகேஷ் ராகுல் - விராட் கோலி ஜோடி களத்தில் விளையாண்டு வந்தது. 

விராட் கோலி 43.1 ஓவரில் 76 பந்துகளில் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் லோகேஷ் ராகுல் - மனிஷ் பாண்டே ஆட்டத்தை துவக்கிய நிலையில், மனிஷ் பாண்டே 4 பந்துகளில் 2 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்தில் லோகேஷ் ராகுல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி இறுதி வரை ஆடி வந்தது. இறுதி நேரத்தில் லோகேஷ் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்தரை ஜடேஜா - முகமது சமி இறுதியாக களத்தில் இருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். முகமது சமி 1 பந்துகளில் 1 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை துவக்கவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind aus match india diclar 341 runs for aus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->