#T20WorldCup : ஐ.சி.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐ.சி.சி. அனுமதித்துள்ளது.

இந்தியாவில் நடக்க இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன்-லில் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில், தகுதி சுற்று உட்பட மொத்தம் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டி20 உலகக்கோப்பை போட்டி மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. 

8 அணிகளுக்கான முதல் சுற்றில் (தகுதி சுற்று) வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களில் முதல் இரு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் தகுதி பெற்று, உலக கோப்பை தொடரில் இடம் பெரும். 'சூப்பர் 12' என்று அழைக்கப்படும் இதில், மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ளவும், பயிற்சியாளர்களுடன் 8 ஸ்டாஃப்கள் கலந்து கொள்ளவும் ஐ.சி.சி. அனுமதித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கூடுதல் வீரர்களுக்கு ஐ.சி.சி தற்போது இந்த அனுமதியை அளித்துள்ளது. கூடுதல் வீரர்களுக்கான செலவுகளை அந்தந்த அணிகளின் நிர்வாகங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.சி.சி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC t20 world cup 2021 update news


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->