இந்திய அணிதான் வரும் டி20 உலகக்கோப்பை சேம்பியன் - ரோஹித் சர்மா சதம், கேப்டன்சி குறித்து கிரேம் ஸ்வான் சொன்ன வார்த்தை!
Graeme Swann say About Rohit Sharma and virat
அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோகித் சர்மாவின் தலைமை சிறந்ததாக அமையும் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் மூத்த சுழற் பந்துவீச்சாளரும், தற்போது வர்ணனையாளராக இருக்கக்கூடிய கிரேம் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியாவின் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, "ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அச்சம் இல்லாத பேட்டிங் அணுகுமுறை (அக்ரஸிவ் பிளே) உலக கோப்பை தொடரை வெல்வதற்கு உண்டான வாய்ப்பை அதிகரித்துள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது.
இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் தொடரில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து அணிகளுக்குமே ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன். ஒருவேளை இந்திய அணி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த தயங்கினால், இந்திய அணியை மற்ற அணிகள் சுத்தி சுத்தி அடித்து துவைப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பழைய யுத்தியை பயன்படுத்தி விளையாடியது. எந்த ஆட்டத்திலும் அச்சமின்றி இங்கிலாந்து அணி ஆட்டக்காரர்கள் செயல்படவில்லை. இதனால் அவர்கள் வெளியேறினார்கள்.
ஆனால் மற்ற அணிகள் தீவிர தாக்குதலை தொடுத்தனர். அவர்களின் ஆட்டமும் சுவாரசியத்தை உண்டாக்கியது. அவர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்தது.
ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடும் போது, நாம் அச்சம் இல்லாமல் அனைத்து விதமான தாக்குதலையும் தொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றியை பெற முடியும். இந்த யுத்தியை கையாண்ட பல அணிகள் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளன. இந்திய அணியும் இதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம்.
விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு மேலும் பலத்தை கூட்டி இருக்கிறது. விராட் கோலி தனது அச்சமில்லா ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இது அவருக்கு தேவையான ஒன்று. விராட் கோலி ஒரு அருமையான வீரர். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் சதம் அடிக்காமல் இருந்தது என்னால் நம்ப முடியவில்லை. அவர் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நிச்சயம் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
நடைபாண்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இரண்டு அரை சாதங்கள் மட்டுமே அவர் அடித்துள்ளார். நான் நிச்சயம் கூறுகிறேன், நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரில் ரோஹித் சர்மா நிச்சயம் சதம் அடிப்பார்.
இந்திய வீரர்களில் யார் சதம் அடிக்கிறார்களோ, இல்லையோ, நிச்சயம் ரோகித் சர்மா அடிபார். அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்திய அணையை வழிநடத்த சரியான நபர் ரோகித் சர்மா தான். அவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து இந்தியா பெரிய ஸ்கூரை பதிவு செய்து வருகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
English Summary
Graeme Swann say About Rohit Sharma and virat