ஹர்திக் பாண்டியாவிற்கு காத்திருக்கும் வாய்ப்பு.. கங்குலியின் அடுத்த பிளான்.. இந்திய அணியில் நடக்கப்போகும் மாற்றம்.?
ganguly new paln for hardik pandya
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அயர்லாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி நாளையும் மற்றும் 28 ஆம் தேதியும் 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் தனி கவனம் பெற்று உள்ளார். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா தொடர்க்கு ரிஷப் பண்ட்-க்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா தான் கேப்டனாக செயல்பட்டு இருக்க வேண்டும் என பலரும் கூறினர்.
இந்நிலையில், இந்த நம்பிக்கைக்கு விடியல் பிறந்துள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி அடுத்து வரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் நேரில் சென்று பார்வையிட உள்ளார். போட்டி முழுவதும் ஹர்திக் பாண்டியா எப்படி பவுலர்களை வழிநடத்துகிறார். கேப்டனாக எப்படி வியூகம் வகுக்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்க உள்ளார்.
ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்துவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. கே.எல்.ராகுல் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சொதப்பி விட்டார். ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்கா தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்றுக்கொடுத்தார். எனவே மாற்று வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ganguly new paln for hardik pandya