பதவியேற்றவுடன் அதிரடி முடிவை அறிவிக்கப்போகும் கங்குலி.! ஐ.சி.சி.யின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்( ஐ.சி.சி) ஆலோசனை கூட்டம் துபாயில் 6 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலும் கூடுதலாக கிரிக்கெட் தொடர்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி அடுத்து வரும் 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும். இரண்டு 50 ஓவர் உலக கோப்பை மற்றும் நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்த தொடர்களுடன் மேலும் கூடுதலாக இரண்டு ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் போட்டியை நடத்தும் போது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐ.சி.சி.க்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்து தான் பெற முடியும். அதுவே இரு நாட்டு தொடர்கள் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.

இதன் காரணமாக ஐ.சி.சி.யின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் கங்குலியே இறுதி முடிவை எடுப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganguly make decission in


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->