தோனிக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு தர வேண்டும்! பிரபல வீரர் தேர்வு குழுவிடம் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தோனியின் ஓய்வு குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து பேசி உள்ள கவுதம் காம்பீர், ஓய்வு என்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவு என கூறினார்.

வீரர்கள் விரும்பும் வரை விளையாட முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், அணியின் எதிர்காலத்தையும் கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் தோனி விளையாடுவது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள காம்பீர், அடுத்த நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான வீரர்கள் இந்திய அணிக்கு வரவேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அணியின் கேப்டனாக உள்ளவர்கள், இந்த வீரர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என தேர்வு குழுவிடம் தைரியமாக தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள காம்பீர், அடுத்த உலகக்கோப்பையில் தோனி இந்திய அணியில் இருப்பாரா என்பதை விடுத்து, அடுத்த வரும் உலகக்கோப்பையில் நம் அணி எப்படி வெல்லப் போவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் தோனியைத் தாண்டி ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gambir tells about dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->