அன்று எங்களுக்கு என்ன நிலையோ அது தான் இன்று உங்களுக்கு., தோனி குறித்து காம்பீர் காட்டம்!!
gambir says about dhoni
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு வெளியேறியது அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனியே இருந்து வருகிறார். உலக கோப்பைக்கு பிறகு தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து தற்போது வரை தோனியும் எந்த கருத்தையும் சொல்ல வில்லை இந்திய அணியின் தேர்வுக்குழு தோனி குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுகிறது அந்த அணியில் தோனி இடம் பெறுவாரா இல்லையா என்பது வீரர்கள் பட்டியலில் அறிவித்த பிறகுதான் தெரியும். பெரும்பாலும் தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற மாட்டார் என்று தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தோனிக்கு பதிலாக இந்திய அணிக்கு மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்கான முக்கியமான நேரம் இதுதான் என கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில் தற்போது எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது மிகவும் முக்கியமானது தோனி கேப்டனாக இருந்தபோது வருங்காலத்தைப் பற்றிய யோசித்தார். ஆஸ்திரேலியாவில் வைத்து டோனி என்ன சொன்னார் என்பது நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் அவர் நான் சச்சின் சேவாக் ஆகியோர் சிபி சீரியஸ் தொடரில் இணைந்து விளையாட முடியாது மைதானங்கள் பெரிதாக இருப்பதால் பீல்டிங் செய்ய இயலாது என்று கூறினார் அவர் 2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எங்கள் மூவருக்கும் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி தயாராகி வருகிறார் என்பதை வெளிப்படுத்த தான் அவ்வாறு கூறினார்.
எமோசனல் ஆவதை விட செய்முறை முடிவுகளை எடுப்பது அவசியம் தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம் இது தான் ரிஷீப் பந்த், சஞ்சு சாம்சன், கிஷன் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர் யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களா அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும் ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்பு கொடுக்க வேண்டும், ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அடுத்த வீரரை செய்து தேர்வு செய்யலாம் அப்படி செய்தால் அடுத்த உலகக் கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்துவிடலாம் என காம்பீர் பேசினார்.