இங்கிலாந்துடனான சென்னை டெஸ்ட் போட்டி! வெளியான சோகமான அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணியும், இலங்கையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியும் மோதும் டெஸ்ட் போட்டி தொடரானது இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 

கொரோனவால் பாதிக்கப்பட்ட மொயீன் அலி அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இருவரும் அபாயகரமான வீரர்கள் என்பதால் இந்தியாவிற்கு கடுமையான சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது. 

இந்த நிலையில் இந்த போட்டிகளை நேரில் காணுவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ரசிகர்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans not allow to india England test in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->