ருத்ரதாண்டவம் ஆடிய இங்கிலாந்து! இமாலய இலக்கை எட்டுமா பாகிஸ்தான்?!   - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டனான  மோர்கன் மோசமான பார்ம் காரணமாக தன்னை தானே விலக்கிக்கொண்டு, அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் களமிறங்கினார். முதல் 4 ஓவரில் தடுமாற்றம் கண்ட இங்கிலாந்து அணி, 5 மற்றும் 6 ஓவர்களில் 38 ரன்களை விளாசி பாகிஸ்தான் அணியினரை திகைக்க வைத்தனர். 

ஜோஸ் பட்லர் 59 ரன்களையும், மொயின் அலி 36 ரன்களையும், லிவிங்ஸ்டன் 38 ரன்களையும் அடிக்க,19.5 ஓவர்களில் 200 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England set target 201 to Pakistan in 2nd T20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->