உலகக்கோப்பை : கேப்டனுக்கு காயம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தொடரில் நீடிப்பாரா? - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக்கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக மோர்கன் விளையாட உள்ளார். இவரது தலைமையில் ஒருநாள் போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி வலுவான அணியாக உயர்ந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அணி நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், 27-ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடுகிறது. 

இந்த போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பீல்டிங் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் மோர்கனின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காயத்தின் தண்மை அதிகமாக இருந்தால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் விளையாடுவது சந்தேகமே? என தெரிகிறது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England captain Morgan injured


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->