சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய எய்ன் மோர்கன், அதன்பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். கடந்த 2019 ஆண்டு உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.

இவர், இதுவரை 126 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார். 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும், 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார். 35 வயதான மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England captain Eion Morgan retired from international cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->