எனக்கும் எல்லாம் உண்டு..! தல தோனியின் ஹாட் - கூல் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியுடைய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி., கடந்த 2007 ஆம் வருட டி20 உலக கோப்பை மற்றும் கடந்த 2011 ஆம் வருட உலகக்கோப்பை., கடந்த 2013 ஆம் வருட சாம்பியன் டிராபி என்று மூன்று விதமான உலககோப்பைகளை பெற்று தந்தவர். மைதானத்தில் தனி ஒரு சிங்கமாக இருந்து., இறுதிக்கட்ட பரபரப்பான ஆட்டத்தில் இமாலய வெற்றிகளை சொந்தமாக்கியவர். 

இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்த தோனி., தனது அணிக்கு எந்த விதமான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும்., இந்திய அணியின் சக வீரர்கள் மற்றும் பிற அணியின் வீரர்களிடம் மிகமிக பொறுமையுடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர். இவருடைய பொறுப்பு மற்றும் நிதானத்தை கவனித்த ரசிகர்கள் இவரை கூல் தோனி என்றும் அழைத்தனர். 

dhoni,

இவரின் இந்த குணம் குறித்து பலரும் பல சமயங்களில் கேட்ட நிலையில்., தற்போது இதற்கான பதிலை தல தோனி கூறியுள்ளார். இந்த கேள்விகளுக்கு பதிலாக தல தோனி கூறிய சமயத்தில்., எனக்கும் கூட களத்தில் கோபம் மற்றும் விரக்தி அதிகளவு ஏற்படும். அதிகப்படியான விரக்தியை நான் அப்படியே வெளிப்படுத்தினால்., எனது அணியின் தவறான வழிக்கு நானே வழிவகை செய்யும் நிலையில் அமையும்.. 

இதனால் என்னை நான் கட்டுக்குள் வைத்து கொண்டு சம அளவுடைய உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துவேன். இதுவே எனக்கு சில நேரம் அதிக கோபத்தை வெளிப்படுத்துவது போல இருக்கும். சில சமயம் இதனால் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். எனக்கு அந்த நேர உணர்ச்சியை விட அணியின் அடுத்த கட்டம் என்ற சிந்தனை முக்கியமாக இருக்கும் என்று கூறினார்.  

Tamil online news Today News in Tamil

cricket world cup sports news latest


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni speech about her tension relief


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->