மூன்றாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான்.. கண்ணீருடன் சாபம் விட்ட சிறுவன்.!
dhoni fan crying video
ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இந்த சீசனின் இறுதி போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதில் தோனி 2 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகினார். ஆனால் தோனியின் ரன் அவுட் குறித்த முடிவை அறிவிப்பது மூன்றாவது நடுவர்களுக்கே கடினமாக அமைந்தது.
தோனி அவுட்டா? இல்லையா? என இரண்டு அணி வீரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பிறகு மூன்றாவது நடுவர்கள் அவுட் என அறிவித்தனர்.
இந்நிலையில் தோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அச்சிறுவன் டோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.