79 பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த இந்தியன்.! கிறிஸ் கெயில், ஆரோன் பின்ச் சாதனை தகர்ப்பு.!
Delhi Subodh Bhati
20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில், 17 சிக்சர், 17 பவுண்டரி உட்பட 205 ரன்கள் (இரட்டை சதம்) அடித்து டெல்லி லெவன் அணி வீரர் சுபோத் பாட்டி சாதனை புரிந்துள்ளார்.
டெல்லி அணிக்காக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான சுபோத் பாட்டி ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார். அடிப்படையில் ஒரு பந்து வீச்சாளரான சுபோத் பாட்டி-க்கு 30 வயதாகிறது.
இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர். தற்போய்து பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கிளப் கிரிக்கெட் 20ஓவர் போட்டியில், 79 பந்துகளில், 17 சிக்சர், 17 பவுண்டரி உட்பட 205 ரன்கள் (இரட்டை சதம்) அடித்து சுபோத் பாட்டி சாதனை புரிந்துள்ளார்.
கிளப் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் இடையே நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது.
டெல்லி லெவன் அணி வீரர் சுபோத் பாட்டி 79 பந்துகளில் இரட்டை சத்தம் அடித்து அசத்தினார். இவர் குவித்த 205 ரன்களில் 17 சிக்சர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் இந்த சாதனை மூலம், 20 ஓவர் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசிய கிறிஸ் கெயில் சாதனை, 76 பந்துகளில் 172 ரன்களை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் சாதனை உள்ளிட்ட அனைத்து சாதனைகளும் தவிடு பொடியாகியுள்ளது.