டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!! முடிவு யார் கையில்?!  - Seithipunal
Seithipunal


இன்று மாலை நான்கு மணிக்கு துவங்கிய ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகிறது. 

டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டெல்லி டீம் சார்பில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் கீழ் விளையாடும் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், ரபடா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோரும், 

பெங்களூரு அணி  கேப்டன் விராட் கோலி தலைமையில் டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்டோனிஸ், உமேஷ் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும், எதிர் எதிராக மோத இருக்கின்றனர். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் தோல்வியும் பெற்று 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மீதம் உள்ள 3 ஆட்டங்களில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றாலே டெல்லி அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகி விடும். 

பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது. பின்னர் விளையாடி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தையும் கவனமாக ஆடி தப்பித்து வருகின்றனர். இன்றைய இரு அணிகளும் சரிசமமாக விளையாடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. 

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஓவரில் உமேஷ் யாதவ் பவுலராக களமிறங்க, பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டெல்லி அணி சார்பாக பேட்டிங் செய்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dc won the toss in today match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->