அடித்து ஆடிய மும்பை அணி! வெற்றிக்கான இலக்கை நோக்கி சென்னை அணி!
csk vs mi first half match
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடி வருகின்றன.
சென்னை சூப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலேயே 4 ரன்களை அடித்து தனது அதிரடியா காட்டினார். அனால், ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறு முனையில் அதிரடியாக ஆடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய சவ்ரப் திவாரி 42 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக லிங்கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து சென்னை அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிவருகிறது. சற்றுமுன்பு வரை சென்னை அணி ஓவர்களை, ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. விக்கட் எதுவும் தற்போதுவரை விழவில்லை.
English Summary
csk vs mi first half match