தொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.! ரசிகர்கள் குஷி.!
csk new decision
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது. இதனால், தற்போது அணிக்குள் புதிய வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளிகள் பட்டியலில் மேலோங்கி இருக்கிறது. இருப்பினும், சென்னை அணி இரண்டு தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளிகள் பட்டியலில் பின்தங்கி இருக்கிறது.
சென்னை அணியின் இந்த தொடர் தோல்விக்கு பேட்டிங் தான் காரணமாக கூறப்படுகின்றது. சென்னையின் ஓப்பனிங் வீரர்களின் ஆட்டம் சரியாக இல்லை என கூறப்பட்டுள்ளது.
எனவே, புதிய வீரர்களை எடுக்கலாம் என்றாலும், யோசனையாக உள்ளது. எனவே, வீரர்களை களமிறக்குவதில் மற்றம் செய்யலாம் என சிஎஸ்கே அணி முடிவெடுத்துள்ளதாம்.