சிஎஸ்க்கே அணியில் மிகப்பெரிய மாற்றம்.! எதிர்பாராத முடிவை எடுத்த தோனி.!  - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வரிசையாக வெற்றிகளை குவிக்கும் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகள் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், சென்னை தற்போது கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றது. 

நாளை நடக்கும் போட்டியில் சென்னை ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் நிச்சயம் சென்னை வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், பிளே ஆப் செல்வதில் சென்னைக்கு சிக்கல் ஏற்படும். அணியில் இரு முக்கியமான வீரர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முரளி விஜய் மற்றும் ஹஸல்வுட் ஆகியோர் நீக்கப்பட இருக்கின்றனர். முரளிவிஜய் சென்னை அணியில் மோசமாக பேட்டிங் செய்து வருகின்றார். இதன் காரணமாக, அவரை நீக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஹஸல்வுட் நன்றாக பவுலிங் செய்த பொழுதும் வெளிநாட்டு வீரர்கள் கோட்டா காரணமாக அவர் நீக்கப்பட உள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு வெளிநாட்டு வீரர் அணியில் சேர இருக்கின்றார். 

அம்பத்தி ராயுடு அணிக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதுபோல பிராவோ மணிக்குள் இணைகிறார். தற்போது பிராவோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை சிஎஸ்கே வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது. பிராவோக்குள் வந்தால் சாம் கரண் நீக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சென்னை அணியின் மற்றொரு ட்வீட்டில் சாம் கரன் விளையாடும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. எனவே அவரும் இருப்பார் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk got 2 new changes in the team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->