பாதருக்கு காட் பாதர் ஆகிய ரொனால்டோ.. பிலினீயர் ரொனால்டோ.!! - Seithipunal
Seithipunal


கால்பந்து உலகின் முதல் பில்லியனர் என்ற பெருமையை போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பெற்றுள்ளார். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிக்காக கால்பந்து விளையாடி உள்ளார். 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, இத்தாலியின் யூவென்ட்ஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியின் கால்பந்து தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இத்தாலியில் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வருடத்தில் உலக அளவில் அதிக அளவு சம்பாதித்த வீரர்களின் பட்டியல் போபர்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டது. 

அதில் ரொனால்டோ பில்லியனர் ஆகியுள்ளதாக போபர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில், இவர் யூவென்ட்ஸ் அணிக்காக விளையாடிய வகையில், ரொனால்டோவுக்கு 105 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக கால்பந்து விளையாட்டில் ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.7000 கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதித்து வீரர் என்ற பெருமையை தற்போது தக்கவைத்துள்ளார். விளையாட்டு உலகில் இதற்கு முன்னதாகவே கோல்ப் வீரர் டைகர் ஓட்ஸ் மற்றும் குத்துச்சண்டை வீரர் பிலாயிட் மேவெதர் ஆகியோர் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளனர். 

தனது 17 வருட கால்பந்து வாழ்க்கையில் 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளதாகவும், மற்றவை விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக கிடைத்துள்ளது என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் வழியாக உலகளவில் அதிகளவு பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரும் இவர் தான். இன்ஸ்டாவில் இவரை 22 கோடி பேர் பின்பற்றி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cristiano Ronaldo is the billionaire of football


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->