ஹர்திக் பாண்டியாவின் திடீர் முடிவு.. சோகத்தில் ரசிகர்கள்.!
cricket player hardik pandya tell about health and return to team
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டராக விளங்குபவர் ஹர்திக் பாண்டியா. இவர் தொடர் முதுகுவலியின் காரணமாக அவதியடைந்து வந்ததால் இலண்டனிற்கு சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
உடல் நலம் தற்போது நல்ல நிலையில் மீண்டு வருவதால்., விரைவாக இந்திய அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர். இந்த தருணத்தில்., தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக உணர்கிறேன்.. இப்போதே கிரிக்கெட் விளையாட அவசரம் காட்டமாட்டேன் என்று கூறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா தெரிவித்த சமயத்தில்., "நான் உண்மையை கூற வேண்டும் என்றால்., இப்போது நலமாக இருப்பது போல உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டு வரும் பணியை திட்டமிட்டு செய்து வருகிறேன்.
cricket world cup sports news latest
அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின்னர் அணிக்கு திருப்புவது எளிதான காரியம் கிடையாது.. அனைத்து வகையிலும் நான் தயாரா? என்பதை சோதனை செய்து கொண்டு இருக்கிறேன். உடலளவில் நான் எப்போதும் உறுதிதான்., ஆனால் மனதளவிலும் அது பெற வேண்டும்.
எனது வாழ்க்கையில் பல விஷயம் நடந்துள்ளது. இதனால் நான் மனதளவில் வலுவுள்ள நபராக மாற்றியுள்ளேன். மீண்டும் அணிக்கு திரும்புவதில் அவசரம் காட்ட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் இப்போது அவசரப்பட்டால்., இதனைப்போன்ற பிரச்சனை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நீண்ட இடைவெளி மீண்டும் ஏற்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
cricket player hardik pandya tell about health and return to team