சென்னை அணி விளையாட்டுல தோணி மகளை.. மோசமாக பேசிய நெட்டிசன்.!
CRICKET FAN BAD POST ABOUT DHONI DAUGHTER
சென்னை அணி ஐபிஎல் 21வது ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடிய போது 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற பொழுது மூன்று பந்துகளில் கேதர் ஜாதவ் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
கடைசி மூன்று பந்துகளில் 2 சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்து ஜடேஜா ஆறுதல் அளித்தார். இதனால், கேதர் ஜாதவ்-இன் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில், இதுகுறித்து வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை வைத்தார். வேலை செய்யாவிட்டாலும் கூட சம்பளம் சரியாக வந்துவிடும் என்று மெத்தனமாக சிஎஸ்கே அணியினர் விளையாடுவதாக சேவாக் கூறியது சிஎஸ்கே வீரர்களையும் கோபப்படுத்தி, அரசு ஊழியர்களையும் வெறுப்பேற்றி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை தோற்ற காரணத்தால் csk ரசிகர் ஒருவர் தோனி மகள் குறித்து ஆபாசமாக எழுதி கமெண்ட் செய்திருக்கிறான். தோனியின் மகளுக்கு வெறும் ஐந்து வயது தான் ஆகின்றது. அந்த சிறு குழந்தையை இப்படி ஆபாச ரீதியாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கேவலவாதியின் செயலுக்கு சோஷியல் மீடியாவில் கடும் கண்டனநகைகளை தெரிவித்து வருகின்றனர். வீரர் ஒழுங்காக விளையாவில்லை எனில் அவர்களது குடும்பதினர் குறித்து ஆபாசமாகச் சித்திரிப்பது வாடிக்கையாகி விட்டது. இதையே தான் சுனில் கவாஸ்கரும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
CRICKET FAN BAD POST ABOUT DHONI DAUGHTER