தோனிக்காக முடிவை மாற்றிய கங்குலி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
coming 24 ganguly announced new announcement
கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி . தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்தநிலையில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.
ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுக்க போவதாக தோனி அறிவித்தார். தோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வுபெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார் என அவரை யாரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வற்புறுத்தக்கூடாது என முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியதாவுது, தோனியின் எதிர்காலம் குறித்து வரும் 24 ஆம் தேதி ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினரை வருகிற 24 ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.
அப்போது தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதை நான் கேட்டு அறிவேன். அதற்கு பிறகு எனது அதன்பின்னர் எனது கருத்தை தோனியுடன் கலந்துரையாடுவேன்.
இந்த மாதம் 24 ஆம் தேதி தான் வங்காளதேசத்துக்கு எதிராக டி20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்பபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
coming 24 ganguly announced new announcement