நேற்றைய போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்.!!
chris gayle 351 sixer
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் நான்காவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல்-மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
மயங்க் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இதையடுத்து இறங்கிய கிறிஸ் கெயில், 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன், 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தீபக் ஹூடா 28 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் கடைசி ஓவரில் அவர் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 221 ரன்களை எடுத்தது.
இந்த போட்டியில் கிறிஸ் கெயில் புதிய சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெயில் இதுவரை 133 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 351 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள டிவில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும். மூன்றாவது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.