இந்திய அணியில் ஏற்ப்பட்ட அதிரடி மாற்றம்., புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!!
changes in indian team
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெறவுள்ளது இதற்காக வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய ‘ஏ’ அணி தயராகி வருகிறது. இந்த தொடர் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய ‘ஏ’ அணியில் ரிஷப் பந்த், மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைக்கான போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தவான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது கடுமையான காயம் ஏற்பட்டது இதனால் உலககோப்பை தொடர் முழுவதிலும் இருந்து தவான் விலகினார். இதனால் தவானுக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆகவே, ரிஷப் பந்துக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக வீரர் விஜய் சங்கருக்குப் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக அன்மோல்ப்ரீத் சிங் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய ‘ஏ’ அணியின் இளம் தொடக்க வீரரான பிரித்வி ஷா காயத்தால் விலகியதை தொடர்ந்து அவருக்குப் பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.