டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஓரம் கட்டப்பட்ட இரண்டு முக்கிய வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கௌரவ ஆலோசகராக மகேந்திர சிங் தோனி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. 

அதன்படி, இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கோலி தலைமையிலான இந்திய அணியின் மிகப்பெரிய சர்ப்ரைஸான தேர்வு என்றால் அது, ரவிச்சந்திரன் அஷ்வின் தான். 2017ம் ஆண்டு கடைசியாக டி20 கிரிக்கெட்டில் அஷ்வின் ஆடினார். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக டி20 அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அணியில் ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர்  படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல டி20-யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்காம் தர வரிசையில் அடிவந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் காயமடைந்து அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் அப்படியே ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chahal and shreyas iyer not get place i india team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->