இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் கேப்டன் இவரா.? வெளியான தகவல்.!!
bumra may ba again captain for team india
ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியின் 5வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அஸ்வின் மற்றும் விராட் கோலி பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டனர். கேப்டன் ரோகித் சர்மா இன்னும் தனிமையில் இருப்பதால், அணியை தலைமை ஏற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மாற்று கேப்டனான துணை கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பதவிக்கான தேடலில் ரிஷப் பண்ட், பும்ரா மற்றும் விராட் கோலி மட்டுமே உள்ளனர்.
இதனிடையே, ரோகித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.
English Summary
bumra may ba again captain for team india