அடுத்த சில போட்டிகளிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை! அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 71 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் தோனியை ஆட்டத்தை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காணாத அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தோனி முதல் பந்தில் நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட் அறிவிக்கப்பட்டு பின், மூன்றாவது நடுவரின் பார்வையில் தோனி அவுட் இல்லை என்று ஆனது.

அடுத்து ஒரு பந்தை மட்டுமே சந்திக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. 2 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேபோல், சென்னை அணியின் முக்கிய வீரரான பிராவோ முதல் போட்டியில் பங்கேற்க வில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்ததாவது, "சென்னை அணியில் பிராவோ இன்னும் ஒரு சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bravo not played some ipl matches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->