#Breaking: ஐ.பி.எல் 2021 அரபு அமீரகத்தில் நடைபெறும் - பி.சி.சி.ஐ அறிவிப்பு.!
BCCI Announce IPL 2021 at Arab Emirates BCCI Deputy President Announce 29 May 2021
14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு கொரோனா நடவடிக்கைகளுடன் நடைபெற்று வந்தது. சென்னை, மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த மே 4 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஐ.பி.எல் போட்டித்தொடர் தள்ளிவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. பி.சி.சி.ஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா 2021 ஐ.பி.எல் போட்டித்தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்த சீசனுக்காக ஐபிஎல் போட்டித்தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதனால் ஐ.பி.எல் ரசிகர்கள் பெரும் இன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
BCCI Announce IPL 2021 at Arab Emirates BCCI Deputy President Announce 29 May 2021