பார்வையாளர்கள் இல்லாததால் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்.! ஐயோ பாவம்..! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல நிகழ்வுகளை ரத்து செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிக்கான போட்டியில் பார்வையாளர்களின் இன்றி பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரண்டு அணிகளின் கேப்டன்கள் மற்றும் வீரர்கள் வீரர்கள் கை கொடுப்பதற்கு பதிலாக வெவ்வேறு செய்கைகள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதன்பின்னர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

ஆட்டம் ஆரம்பமான பின்னர் சிக்சர்கள் விழும் பந்துகளை வீரர்களே தேடிச்சென்று எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பந்துகளை தேடி கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. மேலும், வீரர்கள் விக்கெட்டுகள் எடுத்த போதும் கூட ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தது. இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், டீவியில் கண்ட  ரசிகர்களுக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருக்கக் கூடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ball found by player in aus vs nz match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->