ஐசிசியை கிழித்து தொங்கவிட்ட அமிதாப் பச்சன் மற்றும் ரோஹித் சர்மா.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241  ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்ததன பின்னர் இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தனர் இதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்துள்ளது.

பின்னர் சூப்பர் ஓவர் முறையில் அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஐசிசியின் இந்த பவுண்டரி முறையை பலரும் விமர்சித்து வருகின்றனர். 



 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விதிமுறையை விமர்சித்துள்ளார். உன்னிடம் (ஐசிசி) ஒரு 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது என்னிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்டால் அதற்கு ஐசிசி நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ள நீங்கள்தான் பணக்காரர் என்று ஐசிசி சொல்வதுபோல் கலாய்த்து பதிவு செய்துள்ளார். 

மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ட்விட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்டில் சில விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh bachchan tweet about ICC rule


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->