உலகக்கோப்பை இந்திய அணியில் கண்டு கொள்ளவே இல்லையே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திடீரென ஓய்வு! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு கடந்த நான்கு வருடங்களாக மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது என்றால், அது நான்காவது இடத்தில் இறங்க கூடிய வீரர் யார் என்பதுதான். அதற்காக 12 வீரர்கள் பரிசோதித்த நிலையில் இறுதியாக, லோகேஷ் ராகுலும் விஜய் ஷங்கரும் தேர்வு செய்து உலக கோப்பை இந்திய அணி சென்றது. 

அப்பொழுது அந்த இடத்தில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு புறக்கணிக்கப்பட்ட அதிர்ச்சியில் விஜய் சங்கரின் தேர்வினை கிண்டலடித்து பேசினார். ஆனால் அவர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்த நிலையில் அவருடைய இடத்தில் ராகுல் இறங்கி விளையாட, நான்காவது இடத்திற்கு அம்பத்தி ராயுடு தெரிவு செய்யப்படுவார் என கருதப்பட்ட நிலையில், ஆனால் அதற்கு மாறாக ரிஷப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டார். 

இதில் அதிர்ச்சி அடைந்த ராயுடு மேலும் அதிர்ச்சியாக விஜய்சங்கர் காயத்தில் விலகியபோது, இதுவரை சர்வதேச ஒருநாள்  போட்டிகளில் விளையாடாத மயங்க் அகர்வாலை தேர்வு செய்து, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. காத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் ராயுடு இருக்கும்போது, தேர்வாளர்கள் கண்டுகொள்ளாது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது. 

உச்சகட்ட அதிருப்தியில் அவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக ஆறு இருபது ஓவர் போட்டிகளிலும், 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambati rayudu retires from all form of cricket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->