உலகக்கோப்பையில் நிகழ்ந்த அவமானகரமான சம்பவம்! வீரருக்கு ஓராண்டு தடை விதித்தது கிரிக்கெட் வாரியம்!
Afghanistan player aftaf alam banned one year for his misbehave with girl
இங்கிலாந்தில் சவுத்தாம்டன் மைதானத்தில் இந்தியா - ஆப்பகானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை போட்டியின் போது அவமானகரமான சம்பவம் நடந்தது. அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 54 ரன்கள் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளார் அப்தாப் ஆலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பெண் ஒருவருடன் தவறாக நடக்க முயன்றதாக அப்தால் ஆலம் மீது, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டன் மைதானத்தில் புகார் எழுந்தது. இதனை கவனத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்தால் ஆலம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தது.
ஆலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியுள்ளதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் நடத்திய விசாரணையில் உறுதி செய்துள்ளது. இதன் கராணமாக ஒராண்டு காலம் ஆலமுக்கு உள்ளூர் மட்டும் சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Afghanistan player aftaf alam banned one year for his misbehave with girl