3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.? - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வென்று, 1 - 1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. 

இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கேப்டவுனில் இந்திய அணி வென்றதில்லை. மேலும், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது இல்லை. ஆகவே மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும். 

இந்நிலையில், இன்று தொடங்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக சாஹா இடம் பெறுவார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதுகு தசை பிடிப்பு காரணமாக, விராட்கோலி விளையாடவில்லை. இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட உள்ளார். ஆகையால், யாரேனும் ஒருவரை வெளியேற்றும் கட்டாயத்தில் இந்தியா உள்ளது. புஜாரா அல்லது ரகானே இடம் பெறுவது சந்தேகம்.

அதேபோல, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என விராட்கோலி நேற்று தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ் யாதவ் இடம் பெறுவார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd test match may be indian team change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->