திருச்சியில் எழுந்து நிற்கும் அத்திவரதர்.! அலைமோதும் பக்தர்கள்.!
thirchy athivarathar
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. சயன கோலத்தில் இருந்து தற்போது நின்ற கோலத்தில் காட்சி தருவதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பல்வேறு இன்னல்கள் ஏற்பட்ட போதும் அத்திவரதர் தரிசனத்தை காண மக்கள் சளைக்கவில்லை.
இந்த நிலையில், திருச்சியிலும் இன்று முதல் ஒரு அத்திவரதர் உதயமாகியுள்ளார். குழந்தைகள் மட்டும் முதியோர்கள் காஞ்சி அத்திவரதரை காண முடியவில்லை இவர்களின் குறையை தீர்க்கும் வண்ணம் தோன்றி இருக்கிறார் திருச்சி அத்திவரதர்.
திருச்சி பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலில் ஆடி மாதத்தில் ஆண்டுதோறும் ருத்ராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த நேரத்தில் ரங்கநாதர், சதாசிவம், நாயன்மார்கள், வள்ளி திருமணம் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து தரிசனம் நடக்கும்.
அதன்படி, ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றார். இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திருச்சி அத்திவரதரை வழிபட்டு வருகின்றனர். இந்த காட்சியானது ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருச்சி அத்திவரதரை காணும் போது காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை பார்த்தது போன்று திருப்தி கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil