சூரியப்பெயர்ச்சி.. அக்டோபரில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்.!
These 3 zodiac get Increment In suriya Peyarchi
அக்டோபர் மாதத்தில் துலா ராசியில் நடக்கின்ற சூரியன் பெயர்ச்சியின் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு தங்களது வாழ்வில் ஒளியை போன்ற பிரகாசம் ஏற்பட போகிறது.
அக்டோபர் மாதத்தில் துலா ராசியில் சூரியன் பெயர்ச்சி ஏற்ப்படுவதாக் கீழ்க்காணும் ராசிக்காரர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில், அக்டோபர் 17-ம் தேதி இரவு 7.22 மணிக்கு சூரியன் ராசி மாறி, துலா ராசிக்குள் நுழைகின்றார்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தினால் முழு ஆதரவு கிடைக்கவுள்ளது. தொழிலில் உங்களுக்கு பதவி உயர்வுடன் சம்பளம் உயரக்கூடும். நீங்கள் புதிய தொழில் துவங்க திட்டமிட்டு இருந்தால் இந்த மாதத்தின் அதை துவங்க சிறப்பான நேரமாகும்.
உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரவுள்ளது.
நீங்கள் செய்யவுள்ள முயற்சிகளுக்கும், உங்களது கடின உழைப்பிற்கும் அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு வகிக்கும் பதவியில் உயர்வு கிடைக்கப் போகிறது. உங்களுடைய வருமானம் உயருகின்ற வாய்ப்புகள் இருக்கின்றன. சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
உங்களது வருமானம் அதிகரிப்பதன் காரணமாக, நீங்கள் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேர்க்க இயலும்.
புதிய தொழில் துவங்குபவர்களுக்கு நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். அத்துடன் திடீரென பண வரவு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
துலா ராசிக்காரர்களுக்கு வாழ்வில் இந்த காலக்கட்டதில் சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளது. இந்த மாற்றத்தினால் வருமானம் மற்றும் சம்பளம் அதிகரிக்கவுள்ளது. நிதி ரீதியில் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
வருமானம் பெருகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நிதி நிலை வலுப்பெறும். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பான நேரம்.
English Summary
These 3 zodiac get Increment In suriya Peyarchi