காவிரியில் புனித நீராடி, பாவசுமைகளை போக்கி கொள்ளும் தீர்த்தவாரி!
Theerththavari in Mayiladuthurai
மயிலாடுதுறை 18.10.19 : ஐப்பசி மாத துலா உற்சவ தொடக்கத்தின் முதல் நாள் தீர்த்தவாரியை முன்னிட்டு, சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியில் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருடந்தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கி கொள்வதாக ஐதீகம்.
இந்த ஆண்டு ஐப்பசி முதல் நாளான இன்று மயிலாடுதுறையில் உள்ள பாடல்பெற்ற சிவாலயங்களான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி, விசாலாட்சி சமேத ஐயாரப்பர், காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், ஆகிய ஆலயங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர்.
பின்னர் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் இளைய ஆதினம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதின கட்டளை ஸ்ரீமத் அமபலவானன் தம்பிரான் சவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
செய்தியாளர் : மணி
English Summary
Theerththavari in Mayiladuthurai