நாளை தை அமாவாசை.. இதை செய்தால் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்.!
Thai ammavasai 2023
ஜனவரி 21ஆம் தேதியான நாளை தை அமாவாசை இந்த தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தை அமாவாசை நாளில் கடல், ஆறு போன்ற நீர், நிலைகளில் தர்ப்பணம் திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை அப்போது படையலிடுவது வழக்கம்.
சிலருக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாது. அவர்கள் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.
இந்த தை அமாவாசை நாளில் வெள்ளம், உளுந்து, கருப்பு எள், உடைகள், உப்பு, பார்லி உள்ளிட்டவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது.
இவ்வாறு தை அமாவாசையில் வழிபாடு செய்வது நமது பித்ருக்களை திருப்தி அடைய வைக்கும். எனவே, நமது குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
கடன் பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபட முடியும். எனவே, முன்னோர்களை வழிபட்டு அவர்களுடைய ஆசியை பெற்ற அடைவோம்.