பெண்களை சபரிமலை அனுமதிக்கும் விவகாரத்தில்..முக்கிய முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.!
supreme court judge importent case
கேரள சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்தநிலையில், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி, இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியும் இதுவரையில் எந்த ஒரு முடிவையும் எட்ட முடியவில்லை. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு அடிப்படை உரிமைகள், மதரீதியான நம்பிக்கைகளால் உருவான நடைமுறைகள் உள்ளிட்ட ஏழு முக்கிய கேள்விகளுக்கு சட்டரீதியான விடை காணுமாறு 9 நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று தொடங்கப்படும் விசாரணையின் போது இரு தரப்பினரும் வாதாட வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து இறுதி செய்யப்பட உள்ளது.
English Summary
supreme court judge importent case