இன்றைய (14-09-2019) ராசிபலன்கள்: இன்று ஆவணி பௌர்ணமி... கிரிவலம் செல்ல தயாராகிவிட்டீர்களா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

எதிர்கால இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய செயல் திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில்  உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்:

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையான தனவரவு உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

மிதுனம்:

நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்களின்  மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

கடகம்:

அரசு சம்பந்தமான செயல்களால் வீண் விரயம் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில்  கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும். பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் காலதாமதம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.

கன்னி:

முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் சாதகமான சூழல் அமையும். மனை தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

துலாம்:

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தாய்மாமன்வழி உறவுகள் மேம்படும். வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும். கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.

விருச்சகம்:

குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். புத்திரர் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும்.

தனுசு:

சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும். உரையாடும்போது கனிவுடன் உரையாடவும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

மகரம்:

மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான  சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

கும்பம்:

நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்:

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். பெரியோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 14 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->