நள்ளிரவில் முக்கிய இடத்துக்கு சென்ற ரஜினி!!
rajinikanth athivarathar dharisanam
நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அத்திவரதரை தரிசிக்க வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த அவர் மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ரஜினியின் வருகையை ஒட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வருகின்ற 16 ஆம் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17 ஆம் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார்.
English Summary
rajinikanth athivarathar dharisanam