ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?! - Seithipunal
Seithipunal


மேஷம் ராசியின் ராகு பெயர்ச்சி பலன் :

இதுவரை ராசிக்கு 4ம் இடத்தில் இருந்துவந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி (13.02.2019) ராசிக்கு 3ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். ராகுபகவான் 3ம் இடத்தில் இருப்பதால் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியமும், மனதைரியமும் மேம்படும். சகோதரர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். செயல்படும் விதத்தில் புத்திக்கூர்மையும், செயல்படும் வேகமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு எண்ணிய லாபத்தை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் மூலம் பொருட்சேர்க்கையும், முன்னேற்றமான சூழலும் உண்டாகும்.

கேது பெயர்ச்சி பலன் :

இதுவரை ராசிக்கு 10ம் இடத்தில் இருந்துவந்த கேதுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி (13.02.2019) ராசிக்கு 9ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். ராசிக்கு ஒன்பதில் அமைந்த கேதுவினால் ஆன்மீகம் தொடர்பான பயணங்களில் ஆர்வம் உண்டாகும். பலவிதமான சிந்தனைகளால் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகும். பிறமத மக்களினால் தனலாபம் உண்டாகும். செயல்படும் வேகமும், மதிநுட்பமும் மேம்படும். வாக்குவன்மையால் லாபகரமான சூழல் உண்டாகும். தந்தைவழி உறவுகளிடம் சற்று நிதானம் வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு :

புதுவிதமான முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கட்சி சார்ந்த உயர் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சார்ந்த பொறுப்புகளும், பயணங்களும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் சில போட்டிகளுக்கிடையே அமையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப பழகுவது நன்மையளிக்கும்.

விவசாயிகளுக்கு :

புதிய ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனை பெற்று செயல்படவும். விவசாயம் சார்ந்த கடன் உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

பெண்களுக்கு :

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். முக்கியமான முடிவுகளை தகுந்த நபர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும்.

கலைஞர்களுக்கு :

முயற்சிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளால் நெருக்கடிகள் குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் எதிர்பார்த்த முடிவுகள் சற்று காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய சிந்தனைகள் நன்மைகளை உண்டாக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சற்று தடைகளும், காலதாமதமும் ஏற்படும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கும்போது நன்கு சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு :

ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahgu ketu palangal for mesha rasi 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->